Published : 28 Oct 2015 09:58 AM
Last Updated : 28 Oct 2015 09:58 AM
முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளின் குறைகளை தீர்ப்பதற்காக அஞ்சல் துறை சார்பில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நாளை (29-ம் தேதி) நடக்கிறது.
அஞ்சலகங்கள் வாயிலாக முதியோர் உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளின் குறைகளை கேட்டறிய நாளை (29-ம் தேதி) குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. செயற்பொறியாளர் (சென்னை துறைமுகம்) அலுவலக வளாகம், தண்டையார்பேட்டை ஹவுசிங் காலனி (சூர்யா உணவகம் எதிரில்), தண்டையார்பேட்டை என்ற முகவரியில் மாலை 3.30 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது. பணப்பட்டுவாடா செய்வதில் காலதாமதம், முழுத் தொகை பட்டுவாடா செய்யப்படாதது அல்லது பணவிடை பட்டுவாடா செய்யும்போது அஞ்சல் ஊழியர்களின் முறைகேடான செயல் ஆகியவற்றைப் பற்றி இந்த முகாமில் புகார்களைத் தெரிவிக்கலாம்.
எனவே, முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள் இம்முகாமில் பங்கேற்று பயனடையுமாறு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கி.ரவீந்தரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT