Published : 25 Feb 2017 09:22 AM
Last Updated : 25 Feb 2017 09:22 AM

சிபிஎஸ்இ பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

சிபிஎஸ்இ பள்ளி பஸ்களில் கண்காணிப்பு கேமராவும், இருப்பிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் கருவியும் கட்டாயம் இருக்க வேண் டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பஸ்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக சிபிஎஸ்இ துணைச் செயலாளர் (இணைப்பு அங்கீகாரம்) கே.சீனிவாசன் அனைத்து சிபிஎஸ்இ பள்ளி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மாணவர்களை அழைத்து வரும் பஸ்கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும்.

பஸ்சின் முன் கண்ணாடியிலும், பின் கண்ணாடியிலும் “பள்ளி பஸ்” என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பஸ்சில் முதல் உதவி பெட்டி இருக்க வேண்டும். பஸ்சின் கதவுகள் சரியாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

உள்ளே இருக்கும் மாணவர்கள் வெளியே இருந்து பார்க்கும் வசதி செய்யப்பட வேண்டும்.

எதிர்பாராமல் ஏதேனும் விபத்து ஏற்பட் டால், உள்ளே இருக்கும் மாணவர்கள் வெளியே தப்பித்துச் செல்லக்கூடிய வகை யில் அவசர கதவு வசதி இருக்க வேண்டும்.

மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லாத வகையில் வேக கட்டுப்பாட்டு சாதனம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஜன்னல்களில் குறுக்குக் கம்பிகள் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இருப்பிடத்தை கண்டறிய உதவும் ஜிபிஎஸ் கருவியும் கண்காணிப்பு கேமராவும் (சிசிடிவி கேமரா) கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x