Published : 27 Sep 2016 11:00 AM
Last Updated : 27 Sep 2016 11:00 AM

ஜெயலலிதா விரைவில் குணமடைய ராமேசுவரத்தில் ரஜினி சகோதரர் சத்தியநாராயணன் சிறப்பு பூஜை

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி, நடிகர் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன் ராமேசுவரத்தில் திங்கள்கிழமை சிறப்பு பூஜை செய்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்தியநாராயணன், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தனது குடும்பத்தின ருடன் 1008 வெள்ளிக் கலச பூஜைகள் வைத்து சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 5 நாட்களாக மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். மேலும் காவிரி பிரச்சினையில் இருந்து தமிழக-கர்நாடக மக்கள் விடுபட்டு சுமுகமாகவும், நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜை செய்தோம் என்றார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில், ‘அன்புள்ள சி.எம். அவர்கள் விரைவில் நலமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x