Published : 12 Aug 2016 08:34 AM
Last Updated : 12 Aug 2016 08:34 AM

சென்னை அருகே கோவளத்தில் வெடிகுண்டுகளை கைமாற்றிய 6 பேர் கைது

கோவளம் அருகே நாட்டு வெடிகுண்டு களை கைமாற்றிய புகாரில், 6 பேர் கொண்ட கும்பலை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

சென்னை அருகே கேளம்பாக்கத் தைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா(34) என்பவர் புதுச்சேரியில் இருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. இவர் கோவளம் அருகே உள்ள நாச்சியார்குளத்தில், உணவு விடுதியில் வைத்து 4 பேரிடம் நாட்டு வெடிகுண்டுகளை கைமாற்றியதாகவும் தெரிகிறது. பாக்ஸ் ஒன்றில் மைதா மாவை போட்டு அதற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வைத்து கைமாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்த ரகசிய தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸார், சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேரை யும் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் இருந்ததும், அவற்றை கைமாற்றியதும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், சுரேஷ் கிருஷ்ணா வுடன் பிடிபட்டவர்கள், சென்னை பாடியைச் சேர்ந்த அன்சாரி(24), ஆசிக் அஹமது(23), சையது(23), சாகுல்(24) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், திருமுல்லைவாயலைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்(32) என்பவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

இந்து முன்னணியைச் சேர்ந்த ஆவடி சுரேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கும் அபுபக்கர் சித்திக் என்பவர், இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்டதும், அவர் புழல் சிறை யில் இருந்தவாறு சுரேஷ் கிருஷ்ணா மூலமாக இவர்களை தொடர்பு கொண் டதும் விசாரணையில் தெரியவந்தது.

தகவல் அறிந்த க்யூ பிரிவு போலீஸார் கேளம்பாக்கம் விரைந் தனர். இவர்கள், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனின் ஆட்களாக இருக்கலாம் என்ற சந்தே கத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

இந்து முன்னணி சுரேஷ் குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் புழல் சிறையில் உள்ளனர். இவர்களை சிறையில் இருந்து திருவள்ளூர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரும் வழியில், நாட்டு வெடிகுண்டுகளை வீசி குழப்பத்தை ஏற்படுத்தி கைதிகளை தப்ப வைக்க திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அதற்காக, நாட்டு வெடிகுண்டு களை நாச்சியார்குளம் பகுதியில் கைமாற்றியபோது, சந்தேகத் தின் அடிப்படையில் அங்குள்ள பொதுமக்கள் அளித்த தகவ லால் அனைவரும் சிக்கியதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x