Published : 09 Feb 2017 08:32 AM
Last Updated : 09 Feb 2017 08:32 AM
முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.தாமோதரன் கூறியதாவது: ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, 2 முறை முதல்வ ராக நியமிக்கப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக் குப் பின்னர் கடந்த 2 மாதங்களாக மிகச் சிறப்பான ஆட்சிபுரிந்துள்ளார் என்றார்.
புதுச்சேரியில் நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயண சாமியை எதிர்த்து அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர்.
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இவர் நெல்லித்தோப்பில் உள்ள தனது கட்சி அலுவலகத்தின் வெளியே பட்டாசு வெடித்து, இனிப்பு கள் வழங்கி கொண்டாடினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT