Published : 27 Mar 2014 11:51 AM
Last Updated : 27 Mar 2014 11:51 AM
நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிப்பது என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 18 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதாக மதச்சார்பற்ற ஜனதா தளம் எடுத்துள்ள முடிவை நாங்கள் வரவேற்கிறோம். எனவே கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பது என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீர்மானித்துள்ளோம். அதன்படி அவர்களின் வெற்றிக்காக கட்சியினர் தேர்தல் பணியாற்றுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT