Published : 02 Sep 2016 09:39 AM
Last Updated : 02 Sep 2016 09:39 AM

செப்டம்பர் 15-ல் கால்நடை பல்கலை. 2-ம் கட்ட கலந்தாய்வு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் இளநிலை பட்டப்படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

மொத்தம் 44 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி அண்ணா கலையரங்கத்தில் காலை 9 மணி முதல் நடைபெறும் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.திலகர் அறிவித்துள்ளார்.

காலியாக உள்ள இடங்கள்

இளநிலை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத் துவம் - 19, இளநிலை உணவுத் தொழில் நுட்பம் - 6, பால் வளத் தொழில் நுட்பம் - 9, கோழியின தொழில்நுட்பம் - 10.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x