Published : 01 Apr 2017 09:43 AM
Last Updated : 01 Apr 2017 09:43 AM
மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா கீழடி அகழாய்வில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என மத்திய தொல்லியல் துறைக்கு பெங்களூருவில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் பரிந்துரை செய்துள்ளது.
கீழடி அகழாய்வு கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கடந்த 24-ம் தேதி அசாம் மாநிலத் துக்கு பணியிட மாற்றம் செய்யப் பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனிடையே கீழடி கண்காணிப்பாளராகத் தொடர விருப்பம் தெரிவித்து பெங்களூரு வில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மார்ச் 30-ம் தேதி முறையீடு செய்துள்ளார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், மத்திய தொல்லியல் துறை கண் காணிப்பாளர் கே.அமர்நாத் ராம கிருஷ்ணா கீழடி அகழாய்வுப் பணி யில் தொடர வேண்டும் எனவும் பணியிட மாற்ற உத்தரவை ரத்து செய்யவும் பரிந்துரை செய்துள் ளது. மேலும், 2 வாரங்களில் பதி லளிக்குமாறும் மத்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT