Published : 08 Jun 2016 11:59 AM
Last Updated : 08 Jun 2016 11:59 AM

அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நத்தம் விஸ்நாதன் உள்ளிட்ட 15 பேர் நீக்கம்

தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 15 பேரை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கட்சிப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் விவரம் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக அவைத் தலைவராக மீண்டும் மதுசூதனன் நியமிக்கப்பட்டுள்ளார். கழகப் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். கழக அமைப்புச் செயலாளராக ஆர்.வைத்திலிங்கம், கழக தலைமை நிலையச் செயலாளராக எடப்பாடி மு. பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கொள்கை பரப்புச் செயலாளராக தம்பிதுரை, கழக தேர்தல் பிரிவுச் செயலாளராக பொள்ளாச்சி ஏ. ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நத்தம் விசுவநாதன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நத்தம் விஸ்வநாதன், நத்தம் சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் என்.கண்ணன் ஆகியோரும் அவரவர் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் வி.மருதராஜ் நியமிக்கப்படுகிறார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், வடசென்னை தெற்கு மாவட்டம், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், வேலூர் கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்டம், கரூர் மாவட்டச் செயலாளர், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x