விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்: பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு

விஜயகாந்துக்கு பிடிவாரன்ட்: பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தமிழக முதல்வர் ஜெய லலிதாவை அவதூறாகப் பேசிய தாக தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத தேமுதிக தலைவர் விஜயகாந் துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, 2012 ஆகஸ்ட் 14-ல் நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜயகாந்த், தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சித்து பேசியதாக பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கின் விசாரணை பெரம்பலூர் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கு விசாரணையில் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த விஜயகாந்துக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நஷிமா பானு உத்தரவிட்டார்.

இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட தேமுதிக செயலாளர் துரை.காமராஜ் கூறும்போது, “இந்த வழக்கில் விஜயகாந்த் ஆஜராகத் தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில், நாங்கள் உத்தரவு பெற்றுள்ளோம். வழக் கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப் பில் ஈடுபட்டுள்ளதால், அந்த உத்தரவை பெரம்பலூர் நீதிமன் றத்தில் சமர்ப்பிக்க இயலவில்லை. போராட்டத்தில் ஈடுபடாத வழக்கறிஞர்களைக் கொண்டு, பெரம்பலூர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை உடனடியாக சமர்ப்பிப்போம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in