Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

உச்ச நீதிமன்ற தீர்ப்பு: ராஜீவ் கொலையாளிகள் எதிர்பார்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களது கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தங்களது தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என முறையிட்டு வருகின்றனர்.

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்குத் தண்டனை ரத்து குறித்த தகவல், ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.

மூவரும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதிக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x