Published : 06 Feb 2014 12:23 PM
Last Updated : 06 Feb 2014 12:23 PM
தமிழகத்தில் நடைபெற்று வந்த பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக, சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் அறிவித்துள்ளார்.
மேலும், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம், மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கப்படாததால் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அவர் விளக்கினார்.
அரசுக்கு கோரிக்கை:
கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும், சங்க நிர்வாக செலவினத்திற்கு 5 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர் பாக பிப்ரவரி 3ம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
போராட்டம்:
ஆனால், இதுசம்பந்தமாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து செவ்வாய் கிழமை (பிப். 4) முதல் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்த உள்ளதாக அறிவித்தனர்.
வாபஸ்:
இந்நிலையில், போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக, பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT