Published : 04 Apr 2014 12:42 PM
Last Updated : 04 Apr 2014 12:42 PM

காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதியில் 6 பேர் மனு தாக்கல்

காஞ்சிபுரம் மற்றும் பெரும் புதூர் தொகுதியில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் உள்பட 6 பேர் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அம்பத்தூரைச் சேர்ந்தவர் முகமது அப்பாஸ். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலராக உள்ளார். இரும்பு வியாபாரம் செய்துவரும் இவர் பெரும்புதூர் தொகுதியில் போட்டியிட வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். அத்தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி எம்.சம்பத்குமார் மனுவைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் தாம்பரத்தைச் சேர்ந்த சமூக சேவகர் எ.சு மணி, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜகோ பால், அம்பத்தூரைச் சேர்ந்த உழைப்பாளி மக்கள் கட்சி நிர்வாகி சேகர், சென்னை- மணப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியியல் ஆலோசகர் அயோத்தி ஆகியோர் பெரும் புதூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேடந்தாங்கல் அடுத்த சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக சேவகி சர்மிளா, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியான கா.பாஸ்கரன் பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x