Published : 06 Apr 2017 02:54 PM
Last Updated : 06 Apr 2017 02:54 PM

ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''கடந்த 6 ஆண்டுகளில் கல்வித்துறைக்கு ரூ.1,10,323 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு பெற தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு, சட்டப்பேரவையில் விரைவில் வெளியிடப்படும். ஆசிரியர் நியமனத்தில் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x