Published : 03 Jun 2017 09:00 AM
Last Updated : 03 Jun 2017 09:00 AM
புதுக்கோட்டையில் அரசு மருத் துவக் கல்லூரி வரும் 9-ம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.
புதுக்கோட்டையில் உள்ள கால்நடை பண்ணையில் 127 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த மருத்துவக் கல்லூரி திறப்பு விழா தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் நேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் ஜூன் 9-ம் தேதி நடை பெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற் கும் முதல்வர் பழனிசாமி, மருத் துவக் கல்லூரியைத் திறந்து வைக்க உள்ளார். தொடக்க ஆண்டிலேயே இங்கு 150 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT