Published : 08 Apr 2017 09:19 AM
Last Updated : 08 Apr 2017 09:19 AM

நடிகர் விஷாலின் அறிவிப்புக்கு விவசாயிகள் கூட்டமைப்பு கண்டனம்: ‘தன்மானத்துக்கு விடப்பட்ட சவால்’ என நல்லசாமி கருத்து

திரையரங்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவ சாயிகளுக்கு வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளது விவசாயிகளின் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் விடுத்திருக் கும் சவால் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டமைப் பின் செயலாளர் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா ஒரு விவசாய நாடு. சுதந்திரத்தின்போது மொத்த உள் நாட்டு உற்பத்திக்கான பங்களிப் பில் முதலிடத்தில் விவசாயம் இருந் தது. இன்று மூன்றாவது இடத்துக் குத் தள்ளப்பட்டுவிட்டது. மத்திய, மாநில அரசுகளின் மறைமுக சுரண்டலே இதற்குக் காரணமாகும்.

கடந்த 2004-ல் விவசாயிகள் தற்கொலை உச்சத்துக்குப் போன நிலையில், இதற்கு தீர்வு காண எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை யில் விவசாய கமிஷன் அமைக்கப் பட்டது. இந்த குழுவின் அறிக்கை 2005-ம் ஆண்டு மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதன் மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதன்பின் 2014-ல் ஆட்சி மாற் றம் ஏற்பட்டும், தற்போதைய மத்திய அரசு விவசாய கமிஷன் பரிந்துரையை நாடாளுமன்றத் தில் வைக்கவும், நடைமுறைப் படுத்தவும் தவறிவிட்டது.

திரையரங்குகளில் விற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவசாயி களுக்கு வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். இது விவசாயிகளின் தன்மானத் துக்கும், சுயமரியாதைக்கும் விடுத் திருக்கும் சவால் ஆகும். ஆட்சி யாளர்களுக்கு நெருக்கடி கொடுக் கும் விதத்தில் உரிமைகளுக்காகப் போராடாமல், பிச்சை கேட்டுப் போராடும் விவசாய சங்கத் தலை வர்களை கூட்டமைப்பு வன்மையா கக் கண்டிக்கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x