பிரியங்கா சோப்ரா நடித்த ‘பே வாட்ச்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பிரியங்கா சோப்ரா நடித்த ‘பே வாட்ச்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
Updated on
1 min read

‘பே வாட்ச்’ படத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத் துள்ளது. மேலும் இப்படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க் காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத் தில் வைகுந்த் கஸ்தூரிரங்கன் என்பவர் தாக்கல் செய்த மனு வில், ‘‘டுவைன் ஜான்சன், பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘பே வாட்ச்’ படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றி தழ் அளித்துள்ளது. ஆனால் இந்த படத்துக்கான போஸ்டர் களில் ‘ஏ’ சான்றுக்கான முத்திரை இல்லை. ‘ஏ’ சான்றிதழை மறைத்து இந்த படம் திரை யிடப்படுவதால் 18 வயதுக்கு கீ்ழ் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்கக்கூடும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண் டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று அவசர வழக்காக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு அடையாள மாகத்தான் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. ஆனால் இது பட போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் குறிப்பிடப்படாததால் சிறுவர் கள் முதல் அனைவரும் இப் படத்தைப் பார்க்க நேரிடும். வார இறுதி என்பதால் திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ‘ஏ’ சான்றிதழை மறைத்துள்ள னர்” என்றார்.

இந்த வழக்கை நேற்று அவசர வழக்காக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்கு அடையாள மாகத்தான் தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. ஆனால் இது பட போஸ்டர்கள் மற்றும் விளம்பரங்களில் குறிப்பிடப்படாததால் சிறுவர் கள் முதல் அனைவரும் இப் படத்தைப் பார்க்க நேரிடும். வார இறுதி என்பதால் திரையரங்குகளுக்கு கூட்டம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே ‘ஏ’ சான்றிதழை மறைத்துள்ள னர்” என்றார்.

ஆனால் இணையதளம் மூலமாக இப்படத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, அதில் ‘ஏ’ முத்திரை இடம் பெற்றுள்ளது என அரசு வழக்கறிஞர் எம்.கே. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏ சான்றிதழ் பெற்ற படத்தை 18 வயதுக்கும் குறைவானவர்கள் பார்ப் பதைத் தடுக்கும் கடமை அரசுக்கு உள்ளது. எனவே இப்படத்தை 18 வயதுக்கும் குறைவானவர்கள் திரை யரங்குகளுக்கு சென்று பார்க்காமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு , இப்படத்துக்கு தடை விதிக்க மறுத்து வழக்கை முடித்து வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in