Published : 21 Mar 2017 08:46 AM
Last Updated : 21 Mar 2017 08:46 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் இயந்திரம் ஆகி யவை நிறுவப்படும் என்று அத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயர் தெரி வித்துள்ளார்.
இது தொடர்பாக தண்டையார்பேட்டையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 62 ஆயிரத்து 721 வாக்காளர்கள் உள்ளனர். அந்த தொகுதியில் மொத்தம் 50 அமைவிடங்களில் 256 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் 29 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்ட றியப்பட்டுள்ளது. அங்கு கொடி அணிவகுப்பு, நுண் பார்வை யாளர்கள் நியமனம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும்.
வாக்குப்பதிவை வெளிப் படையாக நடத்தும் விதமாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என தெரிவிக்கும் இயந்திரம் வைக்கப் பட உள்ளது. மேலும் துணை ராணுவப்படை உதவியும் கோர திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், விதி மீறல்கள் தொடர்பாக இலவச தொலைபேசி எண்ணான 18004257012-ல் புகார் தெரிவிக்க லாம். இதுவரை சிறு சிறு விதி மீறல்கள் தொடர்பாக 13 புகார்கள் வந்துள்ளன. அது குறித்து விசாரித்து வருகிறோம்.
வேட்பாளர்கள், பிரச்சார கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த 24 மணி நேரத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். வெளிப் படையான முறையில் அனுமதி வழங்கும் விதமாக, அனைத்து விண்ணப்பங்களும், ஆன்லைன் முறையில் பெறப்படுகிறது. காவல்துறை, தேர்தல் துறை உள்ளிட்டவற்றின் அனுமதி பெறவேண்டி இருப்பதால், ஒற்றைச் சாளர முறையில் ஒரே இடத்தில் அனுமதி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் சம்மந்தப் பட்டவரின் கைபேசிக்கு குறுஞ் செய்தியும் அனுப்பப்படும். இது வரை 48 மனுக்கள் பெறப்பட்டு, 28 மனுக்களுக்கு அனுமதி வழங் கப்பட்டுள்ளது. 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 22 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வரு கிறது. தேர்தலை எளிமையாக நடத் தும் வகையில், ஆர்.கே.நகர் தொகுதி 21 மண்டலங்களாக பிரிக் கப்பட்டு, அவற்றுக்கு தனித் தனி மண்டல அலுவலர்கள், கீழ்நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். வாக்குப் பதிவு பணியில் 1,638 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட உள்ளது.
13 பேர் மனு தாக்கல்
இதுவரை 13 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று 5 பேர் தாக்கல் செய்தனர். 23-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படும். 24-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும் பப்பெற கடைசி நாள் மார்ச் 27. அன்றே சின்னங்களும் அறி விக்கப்படும். வாக்குப் பதிவு ஏப்ரல் 12-ல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை, ராணி மேரி கல்லூரியில் 15-ம் தேதி நடை பெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT