Published : 28 Mar 2014 12:39 PM
Last Updated : 28 Mar 2014 12:39 PM

24 மீனவர்கள் சிறைப் பிடிப்பு

ராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனர்.

இவர்கள் நள்ளிரவில் பாக். ஜலசந்தி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய ரக கப்பல்களில் ரோந்து வந்தனர். இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாகக் கூறி 19 மீனவர்களை சிறைப்பிடித்தனர். 4 விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.

தமிழக மீனவர்கள் தலைமன்னார் காவல் நிலையத்தில் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவர்.

முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விசைப்படகில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் படகு கச்சத்தீவு அருகே புதன்கிழமை இரவு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இவர்களை வியாழக்கிழமை அதிகாலை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீட்ட னர். 5 மீனவர்களையும் நெடுந்தீவு காவல் துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை ஏப்ரல் 8-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி லெனின்குமார் உத்தரவிட்டார்.

பின்னர் மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x