Published : 16 May 2017 08:27 AM
Last Updated : 16 May 2017 08:27 AM

தற்காலிகமாக பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு வாய்ப்பு

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநகர போக்கு வரத்து கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுநர் கள், நடத்துநர்கள் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள் ளது.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து, சென்னை, திருவள் ளூர் உள்பட பல மாவட்டங்களில் தற்காலிக பணியாளர்கள் மூலம் அரசு பேருந்துகளை இயக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்களாக பணியாற்ற கனரக வாகன உரிமம், நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள், அசல் சான்றிதழ்களுடன் அருகில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக கிளையின் மேலாளரை உடனடியாக நேரில் அணுகவும். தகுதியின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x