Published : 24 Aug 2016 08:44 AM
Last Updated : 24 Aug 2016 08:44 AM

மது குடிப்பதை கண்டித்ததால் தாயை எரித்துக் கொன்ற திரிசூலம் இளைஞர் கைது

சென்னை திரிசூலம் எம்ஜிஆர் நகர் கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் முருகன் (42). இவரது மனைவி வேலம்மாள் (38), விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்துவந்தார். இவர்களுக்கு 2 மகன்கள். இதில் இளைய மகன் தினேஷ் (17), பள்ளியில் படிக்கும்போதே மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் மீது அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகளும் உள்ளன. தினேஷ் மது குடிப்பதை தாய் வேலம்மாள் அடிக்கடி கண்டித் துள்ளார்.

நேற்று முன்தினம் போதையில் வீடு திரும்பிய தினேஷை வேலம்மாள் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த தினேஷ், சமையலறையில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வேலம்மாள் மீது ஊற்றி தீவைத்துக் கொளுத்தினார். வேலம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்தவர்கள் ஓடிவந்து, உடலில் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். தினேஷை பிடித்து கட்டிவைத்து, சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலின்பேரில் விரைந்து வந்த பல்லாவரம் போலீஸார், வேலம்மாளை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, வேலம்மாள் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த வழக்கில் தினேஷை போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x