Published : 01 Dec 2013 12:00 AM
Last Updated : 01 Dec 2013 12:00 AM

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்: கருணாநிதி கோரிக்கை

தமிழகத்தில் குல சேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

‘தி இந்து’வில் வெளி யான செய்தியைச் சுட்டிக்காட்டி அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

குலசேகரப்பட்டினத்தில் கூடுதல் இட வசதியும் அருகிலுள்ள மகேந்திரகிரியில் அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன. இந்தத் தொழில்நுட்பத்தில் ராக்கெட் ஏவுதளம் மற்றும் ராக்கெட் இணைப்புத்

தொழிற்கூடம் அமைத் தால், அமெரிக்காவின் தொழில்நுட்பத்தை இந்தியாவிலும் கொண்டு வந்த பெருமை நமக்குக் கிடைக்கும்.

மாநில அரசின் சார்பில் இதற்கான கோரிக்கை வராவிட்டாலும், மத்திய அரசே இந்தத் திட்டங்களைக் கொண்டு வருவ தற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x