Published : 13 Feb 2017 08:27 AM
Last Updated : 13 Feb 2017 08:27 AM
சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் போலீஸ் நிலையத்தில் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் தாசன் தமிழ் என்பவர் அளித்த புகார் மனுவில், சங்கரன் கோவில் தொகுதியில் வறட்சி நிவாரணத் தொகை வழங்கும் பணியை விரைந்து செயல்படுத் துவதற்காக அத்தொகுதி எம்எல்ஏவும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமியிடம் கோரிக்கை விடுக்கச் சென்றேன்.
ஆனால், அவரை 3 நாட்களாக காணவில்லை. கூவத்தூரில் அவரை சிறை வைத்துள்ளதாக தெரிகிறது. அங்கிருந்து அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். புகாரை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி பெற்றுக்கொண்டு இதற்கான ரசீதை அவரிடம் வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT