Published : 02 May 2017 11:15 AM
Last Updated : 02 May 2017 11:15 AM
தமிழர்களை ஏமாற்ற திமுக பயன்படுத்திய வார்த்தைதான் 'மாநில சுயாட்சி'. தண்ணீரில் மூழ்கி வரும் ஒரு கப்பல் திமுக என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழகத்தில் தமிழே படிக்காமல் பிஎச்டி வரை படிக்கும் நிலை உள்ளது.
தமிழர்களை ஏமாற்ற திமுக பயன்படுத்திய வார்த்தைதான் 'மாநில சுயாட்சி'. தண்ணீரில் மூழ்கி வரும் ஒரு கப்பல் திமுக. தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மாணவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசின் கல்விக் கொள்கையை தான் மாணவர்கள் எதிர்க்க வேண்டும், நீட் தேர்வை அல்ல. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதினால் திறமையாக வர முடியும்.
விவசாயிகள் பிரச்சினையை மாநில அரசு தான் தீர்க்க வேண்டும்'' என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT