Published : 13 Feb 2017 02:44 PM
Last Updated : 13 Feb 2017 02:44 PM
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும்போது யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது. காபந்து அரசாக இருந்தாலும் இது அதிமுக அரசுதான் என்று சசிகலா கூறியுள்ளார்.
போயஸ் தோட்டத்துக்கு வெளியே அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று தொண்டர்களிடம் பேசியதாவது:
''தலைவர் எம்.ஜி.ஆர். இறந்த அன்றிலிருந்து, 33 ஆண்டுகளாக பல சோதனைகளில் ஜெயலலிதாவுக்கு துணையிருந்து, இரட்டை இலையை மீட்டு, அன்றிலிருந்து இன்று வரை பல சோதனைகளை வென்று அதிமுக பயணித்து வருகிறது.
ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கும்போது யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது. காபந்து அரசாக இருந்தாலும் இது அதிமுக அரசுதான்.
அரசுக்கு கெட்ட பெயர் வரக் கூடாது என்பதற்காக யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். காவல்துறைக்கு சங்கடம் ஏற்படாமல் அமைதிப் போராட்டம் தொடரும்.
எத்தனை எதிரிகள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் நம்மிடம் உள்ளது. நாம் இதற்கு பழக்கப்பட்டவர்கள்தான். அதிமுகவுக்கு ஓபிஎஸ் துரோகம் இழைத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்'' என்று சசிகலா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT