Published : 09 Jul 2016 09:09 AM
Last Updated : 09 Jul 2016 09:09 AM
சவுகார்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் மின்சார வேலை செய்ய வந்தபோது, பீரோவில் இருந்த ரூ.19 லட்சத்தை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சவுகார்பேட்டையில் தொழிலதிபர் சுரேந்தர் போத்ரா வீட்டில் ரூ.19 லட்சம் பணம் திருட்டு போனது. இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் எண் ணூரைச் சேர்ந்த சரவணன், சுதாகர், செங்குன்றத்தைச் சேர்ந்த நவிந்தர் ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
சுரேந்தர் போத்ராவின் வீட்டில் மின்சார வேலைகள் செய்ய வந்தபோது பீரோவில் இருந்த ரூ.19 லட்சத்தை அவர்கள் திருடியது விசாரணையில் தெரியவந்தது. 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர் களிடம் இருந்து ரூ.11 லட்சம், ஒரு வேன், 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT