Published : 04 Aug 2016 08:33 AM
Last Updated : 04 Aug 2016 08:33 AM

சிவகாசி அருகே சட்ட மாணவர் கொலையில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த மாரி முத்துவின் மகன் மணிகண்டன்(18). மதுரை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

பாண்டியன் நகர் பகுதியில் உள்ள கோயிலில் ஒரு மாதத்துக்கு முன் நடந்த திருவிழாவில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட் டது. இதில், மணிகண்டனுக்கும் சிலருக்கும் விரோதம் ஏற்பட்டது

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த மணி கண்டன், பாட்டி வீட்டுக்குச் செல்வ தாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அப்போது, அப்பகுதியில் உள்ள கோயில் பின்பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மணிகண்டன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். திருத்தங்கல் போலீஸார் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்து வமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுரேஷ், சதீஷ்குமார், அந்தோணி ராஜ், பாலகுருசாமி ஆகியோர் ராஜபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக திருத்தங்கலை சேர்ந்த கார்த்திக், வைரமுத்து, ஆரோக்கியராஜ் உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x