Published : 31 Aug 2016 09:19 AM
Last Updated : 31 Aug 2016 09:19 AM

தாம்பரம் நகராட்சி பள்ளியில் தீ: மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றம்

சேலையூரில் உள்ள தாம்பரம் நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள் பத்திரமாக வெளியேற்றப் பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தாம்பரம் நகராட்சி தொடக்க பள்ளி சேலையூரில் இயங்கி வருகிறது. இதில் 250 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் 2 வகுப்பறைகளில் கடந்த சில மாதங்களாக நகராட்சி சார்பில் பிளிச்சிங் பவுடர் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று திடீரென அந்த அறையில் இருந்து மருந்து நெடியுடன் புகை வந்தது . சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் மாணவ-மாணவிகளுக்கும் ஆசிரியைகளுக்கும் கண் எரிச் சல் குமட்டல் ஏற்பட்டது. பள்ளியின் முன்பு பொதுமக்கள் திரண்ட னர். உடனடியாக அனைவரையும் பள்ளியில் இருந்து வெளி யேற்றினர். தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுப்படுத்தினர். சுமார் 6 மணி நேர போராட்டத் துக்குப் பிறகு தீயை அணைத் தனர். பிளிச்சிங் பவுடர் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறை யின் சுவரை ஜேசிபி மூலம் இடித்து, மூட்டைகளை அப்புறப் படுத்தினர்.

விபத்து காரணமாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது கல்வி துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இந்த சம்ப வம் நேற்று சேலையூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x