Published : 20 Jul 2016 08:46 AM
Last Updated : 20 Jul 2016 08:46 AM

ஆவடி அருகே மாணவர்களுக்கு கத்திக்குத்து

ஆவடி அருகே நெமிலிச்சேரி ரயில் நிலையத்துக்கு மாலை 3.30 மணியளவில் வந்த ரயிலில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஏறினர். அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்திகள் மற்றும் கிரிக்கெட் மட்டைகளால் கல்லூரி மாணவர்களை சரமாரியாக தாக்கி விட்டு ரயிலில் இருந்து குதித்து தப்பியோடினர்.

இதில், அண்ணாசதுக்கத்தில் உள்ள அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்களான திருநின்றவூர் கணேஷ்(17), வேப்பம்பட்டு சண்முகம்(17), திருவள்ளூரைச் சேர்ந்த சுகன்(17), கார்த்திக்(17), பார்த்திபன்(17), முகமது அலி(17), விக்னேஷ்(17), ஜானகி ராமன்(20), புட்லூர் சரத்(18), கடம்பத்தூர் கார்த்திக்(17) ஆகிய 10 பேர் மற்றும் வியாசர்பாடி பகு தியில் உள்ள அரசு கல்லூரி மாணவரான திருவள்ளூரைச் சேர்ந்த இப்ராஹீம்(17), ஐசிஎப் ஊழியரான கடம்பத்தூரைச் சேர்ந்த அஜித்குமார்(20) ஆகிய 12 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் 9 பேர் திருநின்றவூரில் தனியார் மருத்துவமனையிலும், 3 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப் பட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருவள்ளூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x