Published : 12 Oct 2013 11:35 AM
Last Updated : 12 Oct 2013 11:35 AM

கல்லூரி முதல்வர் படுகொலையை கண்டித்து கன்னியாகுமரியில் போராட்டம்

தூத்துக்குடி தனியார் கல்லூரி முதல்வர் படுகொலையை கண்டித்து கன்னியாகுமரியில் தனியார் கல்லூரி முதல்வர்கள் சார்பில் அம்மாவட்டத்தில் அக்.21ல் அனைத்து கல்லூரிகளையும் மூடி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை, கன்னியாகுமரி தனியார் கல்லூரி முதல்வர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமணி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கீழவல்லநாட்டி இன்பென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்த சுரேஷ் (53)-ஐ அதே கல்லூரியில் பயிலும் மூன்று மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் வைத்தே, கடந்த 10ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x