

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவ ரம் விசைப் படகு மீனவர்களிடம் இருந்து மீன் கள், இறால்களை அபகரித்துக் கொண்டு இலங்கை கடற்படை யினர் விரட்டியடித் துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 3,000-க்கும் மேற்பட்ட மீனவர் கள் மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர். இவர்க ளில் சிலர் நேற்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிறிய ரக ரோந்துக் கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், `இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது’ என எச்சரித்தனர். மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்கள், மீன்களை அபகரித்துக் கொண்டு விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதி யிலேயே கைவிட்டு குறைந்த அளவு மீன்களுடன் கரைக்குத் திரும்பியதாக செய்தியாளர்களி டம் தெரிவித்தனர்.