Published : 04 Dec 2013 02:44 PM
Last Updated : 04 Dec 2013 02:44 PM

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

டெல்டா பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக, மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக விநாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இன்று காலை முதல் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணைக்கு வினாடிக்கு 3,577 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 84.54 அடியாக உள்ளது என பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x