பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 20-ல் வேலைவாய்ப்பு பதிவு முகாம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு 20-ல் வேலைவாய்ப்பு பதிவு முகாம்
Updated on
1 min read

சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவுசெய்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வரவேண்டும். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் பதிவு எண் தெரியாவிட்டால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவு முகாம் ஜுன் 20-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெறும். மதிப்பெண் சான்றிதழ் வழங்க தொடங்கிய முதல் நாளே அனைவருக்கும் பதிவுமூப்பு தேதி யாக (சீனியாரிட்டி) வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாண வர்களும் இந்த வசதியை பயன்படுத் திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளம் (www.tnvelaivaaippu.gov.in) வழி யாகவும் கல்வித் தகுதியை பதிவுசெய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in