மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?- எரிசக்தித்துறை அரசாணை வெளியீடு

மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?- எரிசக்தித்துறை அரசாணை வெளியீடு
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்ட படி, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான அரசாணையை எரிசக்தித்துறை வெளியிட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று, 6-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவி யேற்றார். முதல் நாளில் 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட் டார். அதில், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் அறிவிப்பும் ஒன்று.

இத்திட்டம், ஜெயலலிதா பதவி யேற்ற மே 23-ம் தேதி முதலே அமலுக்கு வந்தது. இந்நிலையில், கட்டண விவரம் தொடர்பான அர சாணையை எரிசக்தித்துறை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. அத் துடன் புதிய கட்டணம் தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பயன்பாட்டு வகையிலும் முதல் 100 யூனிட் மின்சாரத்துக்கான கட்டணம் இல்லை என கூறப்பட்டுள்ளது.

மின் கட்டண விவரம்:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in