

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையும் முன்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் சென்றனர். நினைவிடத்தை வலம் வந்து வணங்கிய சசிகலா அங்கு சபதம் செய்தார். நினைவிடத்தின் மீது ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார். பின்னர் கண்கள் கலங்கியபடியே வெளியே வந்தார்.