Published : 14 Oct 2014 09:21 AM
Last Updated : 14 Oct 2014 09:21 AM

புயல் எதிரொலி: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரத்து

ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இன்று புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆந்திராவில் வீசிய புயல் காரணமாக, ஹவுரா - கன்னியாகுமரி (12665) வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுராவில் இருந்து 13-ம் தேதி (நேற்று) புறப்படுவதற்கு பதிலாக 14-ம் தேதி (இன்று) அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும். 14ம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் (12842) ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, 13-ம் தேதி காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு புறப்பட வேண்டிய மெயில், இன்று (14-ம் தேதி) காலை 11.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்த ரயில் பல்ஹார்சா, நாக்பூர், ஜார்சுகுடா மற்றும் கரக்பூர் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x