

திருநெல்வேலி, கங்கைகொண் டான் சிப்காட்டில் செயல்படும் குளிர் பான ஆலைகள் உட்பட 25 நிறுவனங் களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மீ்ண்டும் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த ராகவன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “திருநெல் வேலி மாவட்டம் கங்கைகொண் டான் சிப்காட்டில் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்கள் உட்பட 25 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு தாமிர பரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலைகளுக்கு தினமும் குறைந்த கட்டணத்துக்கு 48.66 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கி யுள்ளார். தாமிரபரணி ஆற்றை நம்பியுள்ள திருநெல்வேலி, தூத் துக்குடி மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில், தாமிரபரணியில் இருந்து தனி யார் தொழிற்சாலைகளுக்கு தண் ணீர் வழங்குவதால் மேலும் பாதிப்பு ஏற்படும். எனவே தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல் வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வழங்குவதற்கு எதிராக உயர் நீதி மன்ற மதுரை கிளையில் ஏற் கெனவே 2 பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் முதலில் விசாரணைக்கு வந்தபோது தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க நீதிபதிகள் தடை விதித்தனர். இந்தத் தடையை விலக்கக் கோரி குளிர்பான நிறுவனங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணை முடிந்த நிலையில், குளிர்பானம் தயாரிக்க தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான அமர்வு உத்தர விட்டது குறிப்பிடத்தக்கது. தற் போது மீண்டும் அதே கோரிக்கை யுடன் பொதுநலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.