பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு

பி.எட். முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு: செப்டம்பரில் 2-வது கட்ட கலந்தாய்வு
Updated on
1 min read

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1,777 பி.எட். இடங்களை நிரப்பு வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் தொடங் கியது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் என பாடவாரியாக மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்தனர். அவர்களுக்கு உடனடியாக கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது. மொத்தமுள்ள 1,777 இடங்களில் 1,314 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 463 இடங்கள் காலியாக உள்ளன. இக்காலியிடங்களை நிரப்புவதற்கான 2-வது கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 15, 16-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் காலியிட விவரங்கள் செப்டம்பர் 9-ம் தேதி இணையதளத்தில் (www.ladywillingdoniase.com) வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பி.எட். மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை எம்.எஸ். தில்லை நாயகி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in