Published : 14 Jul 2016 08:49 AM
Last Updated : 14 Jul 2016 08:49 AM

மேயர் தேர்வு சட்டத்திருத்தம் அமலானது

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர் மானத்தின் மீதான விவாதத் தின் போது மாநகராட்சி சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில் தற்போது மாநகராட்சி மேயரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறையை மாற்றி, கவுன்சிலர்கள் மூலம் மறைமுகமாக தேர்வு செய் வதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.

இது தவிர, நகராட்சிகள் சட்டத் தில் 2011-ம் ஆண்டு அடிப் படையில், நகராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தல்களை நடத்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், இச்சட்டத் திருத்தங்களுக்கு ஆளு நர் ஒப்புதல் பெறப்பட்டு, தற்போது அமல்படுத்தப் பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளி யிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x