Published : 22 Jul 2016 07:38 AM
Last Updated : 22 Jul 2016 07:38 AM

காஞ்சி, கரூரில் 2 பெண் உட்பட 4 மாவோயிஸ்டுகள் கைது: கியூ பிரிவு போலீஸார் விசாரணை

காஞ்சிபுரம் மற்றும் கரூரில் 2 பெண்கள் உட்பட 4 மாவோயிஸ்டு களை கியூ பிரிவு போலீஸார் நேற்று மாலை சுற்றிவளைத்து கைது செய்தனர். பிடிபட்டவர் களிடம் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் சோம மங்கலம் அருகே உள்ள எருமை யூரில் உள்ள ஒரு வீட்டில் மாவோ யிஸ்டுகள் தங்கி இருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று மாலை கியூ பிரிவு போலீஸாரும், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாரும் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற ரீட்டா மேரி, கலா என்ற 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து அவர்களிடம் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வைத்திருந்த டைரி உள்ளிட்ட ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த 3 பேரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் கரூரிலும் ஒரு மாவோயிஸ்டை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து கியூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “2012-ல் தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் மாவோயிஸ்டுகளுக்கும், போலீஸாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அப்போது தப்பிச் சென்றவர்கள் தான் இப்போது பிடிபட்டுள்ளனரா என்ற சந்தேகம் உள்ளது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

காஞ்சிபுரத்தில் கைதான 3 பேர் தந்த தகவல்களின் அடிப் படையில் கரூரிலும் ஒரு மாவோ யிஸ்டை கைது செய்துள்ளோம். இவர்களது பின்னணி குறித்த தகவல்கள் விசாரணையின் முடிவில் தான் தெரியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x