Published : 05 Apr 2017 08:59 AM
Last Updated : 05 Apr 2017 08:59 AM

ஒற்றைத் தீர்ப்பாய முடிவை எதிர்த்து தஞ்சாவூரில் 11-ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு

அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்கள், மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் பொதுநல அமைப் புகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தஞ்சாவூரில் மாவட்டச் செயலாளர் இரா.திருஞானம் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமைகளைப் பாது காக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க வும், வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி டெல்லி யிலும், தஞ்சையிலும் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட் டங்களுக்கு ஆதரவு தெரிவித் தும், ‘காவிரி உரிமை பாது காப்பு போராட்டக் குழு’ அமைக்கப் பட்டது. இதன் ஒருங்கிணைப் பாளராக இரா.திருஞானம் ஒருமன தாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், மத்திய அரசு, மாநிலங் களுக்கிடையேயான நீர் தகராறு சட்டம் 1956-ல் சட்டத்திருத்தம் கொண்டுவந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பதை மறுதலிக்கவும், காவிரி நடுவர் மன்றத்தை கலைத்து விடவும், புதிதாக ஏற்படுத்தியுள்ள ஒற்றைத் தீர்ப்பாயத்தின் அதிகார வரம்புக்குள் காவிரி நதி நீர் சிக்கலை தள்ளிவிட முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 11-ம் தேதி காலை 10 மணியளவில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திரட்டி, பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x