Published : 27 Mar 2014 11:28 AM
Last Updated : 27 Mar 2014 11:28 AM

தோட்டக்கலை அதிகாரி தேர்வுக்கு "கீ ஆன்சர்" வெளியீடு

தோட்டக்கலை அதிகாரி பதவியில் 183 காலியிடங்களை நிரப்ப கடந்த 16-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. போட்டித்தேர்வை நடத்தியது. தற்போது இந்த தேர்வுக்கான தற்காலிக விடைகள் (கீ ஆன்சர்) டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. பொது அறிவு மற்றும் தோட்டக்கலை பாடங்களுக்கான தற்காலிக விடைகளில் ஏதேனும் தவறு இருப்பதாக கருதினால் அதுகுறித்து மார்ச் 27-ம் தேதிக்குள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் முறையிட வேண்டும் என்றும், அதற்கு பிறகு வரும் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x