Published : 10 Sep 2016 03:16 PM
Last Updated : 10 Sep 2016 03:16 PM

15-வது உலக தமிழ் இணைய மாநாடு தொடக்கம்: தமிழ் கற்க வெளிநாட்டு மாணவர்கள் ஆர்வம் - ஜெர்மன் பேராசிரியர் தகவல்

தமிழ் கற்க வெளிநாட்டு மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர் என 15-வது உலக தமிழ் இணைய மாநாட்டில் ஜெர்மனியின் கோலென் பல்கலைக்கழக பேரா சிரியர் உல்ரிக் நிக்லசு பேசினார்.

உலக தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்), திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15-வது உலக தமிழ் இணைய மாநாடு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். மாநாட்டு அமைப்புக்குழு தலைவர் பேராசிரியர் பத்மநாபா வரவேற்றார். கான்பூர் ஐஐடி தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன், மாநாட்டு நிகழ்வுக்குழு தலைவர் ராமகிருஷ்ணன், உலக தகவல் தொழில்நுட்ப மன்ற தலைவர் இனியநேரு, துணைத்தலைவர் சுகந்தி ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில், ஜெர்மனியின் கோலென் பல்கலைக்கழகப் பேராசிரியர் உல்ரிக் நிக்லசு பேசியதாவது:

தமிழ் கூகுள், தமிழ் விக்கிபீடியா இருக்கிறது. இதேபோல் அனைத்துத் துறையிலும் தொழில்நுட்பத்தில் தமிழ் மொழியை கொண்டு சேர்க்க வேண்டும். 2009-ம் ஆண்டு உலக தமிழ் இணைய மாநாடு ஜெர்மனியின் கோலென் பல்கலைக்கழகத்தில் நடத்தப் பட்டது. அங்கு உள்ள தமிழ்த்துறை மாணவர்களிடையே ‘வாட்ஸ் அப்’ல் தமிழ் மொழியில் டைப் செய்து செய்திகளை அனுப்ப பழக்கப்படுத்தியுள்ளளோம்.

ஐரோப்பிய நாடுகளில் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 3 தலைமுறைகளாக வசிக்கின் றனர். இவர்கள் வீடுகளில் தமிழ் பேசினாலும், இவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்து குறித்து தெரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. இதையடுத்து தமிழ் கற்றுக்கொள்ள பள்ளி மாணவர்களை, கோலென் பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ்த் துறைக்கு பெற்றோர்கள் அனுப்புகின்றனர். தமிழ் கற்க வெளிநாட்டு மாணவர்களும் ஆர்வமாக உள்ளனர்.

தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் இலக்கியங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதனால், தமிழ் ஆராய்ச்சிக்காக புத்தகங்க ளைத் தேடி அலையாமல், உட் கார்ந்த இடத்திலேயே இணையம் வாயிலாக தேவையான புத்தகங் களை வாசிக்க முடிகிறது. இவ் வாறு அவர் கூறினார்.உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) செயல் இயக்குநர் செல்வமுரளி நன்றி கூறினார்.

கிராமப்புறத்தில் மாநாடு

முன்னதாக செய்தியாளர் களிடம் உத்தமம் தலைவர் இனியநேரு கூறியதாவது:

வழக்கமாக சென்னை போன்ற பெரிய நகரங்களில் நடைபெறும் இந்தநிகழ்ச்சி, முதன்முறையாக தென்தமிழகத்தில் கிராமப் புறத்தில் இயங்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடை பெறுகிறது. ஆய்வுக் கட்டுரை கள் சமர்ப்பித்தல், கண்காட்சி அரங்கம், மக்கள் அரங்கம் ஆகிய 3 பிரிவுகளாக மாநாடு நடைபெறுகிறது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜெர்மனி, இங்கி லாந்து நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டுள் ளனர். கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆய்வாளர்களும் பங்கேற்கின்றனர் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x