Published : 12 Sep 2016 09:53 AM
Last Updated : 12 Sep 2016 09:53 AM

நதிகளை இணைக்க விரும்பிய பாரதியின் கனவை நிறைவேற்ற வேண்டும்: அரசுக்கு குமரி அனந்தன் கோரிக்கை

இந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்ற பாரதியின் கனவை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக காங் கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் சார்பில் பாரதியாரின் 95-வது நினைவு நாள் நிகழ்ச்சி சென்னை ராயப் பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர்கள் கே.சஞ்சீவி, டி.செல்வம், முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன் உள்ளிட்ட நிர்வாகி கள் மலர்தூவி மரியாதை செலுத்தி னர்.

இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் இலக்கிய அணி சார்பில் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பாரதியார் நினைவுநாள் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கில் பேசிய குமரிஅனந்தன், “இந்திய நதிகளை இணைப்பதுதான் பாரதியின் கனவு. பாரதியின் கனவை இப் போதுள்ள அரசாங்கம் நிறை வேற்ற வேண்டும்” என்றார். இந்த கருத்தரங்கில் பீட்டர் அல் போன்ஸ், கோபண்ணா, ராயபுரம் மனோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x