Published : 26 Jul 2016 07:49 AM
Last Updated : 26 Jul 2016 07:49 AM

தமிழகம் முழுவதும் 44 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 44 டிஎஸ்பிக் களை இடமாற்றம் செய்து டிஜிபி அசோக்குமார் உத்தரவிட் டுள்ளார்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்களாக இருந்த சி.ஜெயசிங், எம்கேபி நகர் உதவி ஆணையராகவும், எஸ்.நவநீதகிருஷ்ணன் கோயம்பேடு உதவி ஆணையராகவும், ஜி.ஹரிக்குமார் அசோக்நகர் உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாபிராம் உதவி ஆணையர் இ.ஜெகதீசன், போக்குவரத்து புலனாய்வு பிரிவு (தெற்கு) உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ்.விஜயகுமார், மீனம்பாக்கம் உதவி ஆணையராகவும், அந்தப் பதவியில் இருந்த சி.நடேசன், சென்னை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராகவும், தாம்பரம் உதவி ஆணையராக இருந்த எஸ்.ராஜசேகரன், போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (மேற்கு) உதவி ஆணையராகவும், கீழ்ப் பாக்கம் உதவி ஆணையராக இருந்த பி.மோகன்தாஸ், கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

எழும்பூர் உதவி ஆணையர் பி.கலிதீர்த்தன், மயிலாடுதுறை டிஎஸ்பியாகவும், எம்கேபி நகர் உதவி ஆணையர் ஆர்.மன்னர்மன்னன், மதுரை ரயில்வே டிஎஸ்பியாகவும், கோயம்பேடு உதவி ஆணையர் ஏ.புகழேந்தி, மதுரை நகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 44 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி கே.அசோக்குமார் நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x