Published : 27 Jan 2017 08:35 AM
Last Updated : 27 Jan 2017 08:35 AM

‘தி இந்து’ குழுமம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி

சென்னையில் வார்தா புயலால் இழந்த பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும் விதமாக ‘பசுமை சென்னை’ என்ற கருப்பொருளை ‘தி இந்து’ குழுமம் உருவாக்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (சனி), நாளை மறுநாள் (ஞாயிறு) ஆகிய 2 நாட்களும் இப்பணிகள் நடக்க உள்ளன.

முக்கியத்துவம் வாய்ந்த, சென்னையின் பசுமைப் போர்வையை மீட்டெடுக்கும் பணியில், விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு அடைப்புக்குறிகளில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நாளை (சனி) காலை 7 மணிக்கு இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளை சார்பில் நன்மங்கலத்தில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள வனப் பகுதி (9677097824), மண்ணிவாக்கம் கரசங்கால் ஏரி (9710737582) ஆகிய பகுதிகளிலும், மாலை 4 மணிக்கு அரசங்கழனி ஏரி (9677097824) பகுதியிலும் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

நாளை மறுநாள் (ஞாயிறு) காலை 7 மணிக்கு நன்மங்கலம் - ஜெயேந்திர நகர் வனப் பகுதியில் (9600138183) மரக்கன்றுகள் நடும் பணி, மேற்கு மாம்பலம் கிட்டு பூங்காவில் (9677097824) மரம் நடுவது குறித்த விழிப்புணர்வு சுவர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி, கரசங்கால் ஏரிக்கரையை (9710737582) தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 3 மணிக்கு ஆதம்பாக்கம், கீழ்க்கட்டளை, சித்தாலப்பாக்கம், அரசங்கழனி ஆகிய பகுதிகளில் (9677097824) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் நடக்க உள்ளது.

இதுமட்டுமல்லாது, சிடிசி ஐந்திணை அமைப்புடன் இணைந்து பழைய மகாபலிபுரம் சாலையில் பூஞ்சேரி பகுதியில் (9551055536) காலை 6.30-க்கு மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. நிழல் அமைப்புடன் இணைந்து, மாதவரத்தில் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அருகில் உள்ள மரப்பூங்காவில் (9840444010) சேதமடைந்த மரங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x