Published : 21 Jun 2017 08:53 AM
Last Updated : 21 Jun 2017 08:53 AM

உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தவே திமுக அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

உள்ளாட்சி தேர்தலை நடத்த தாமதமாவதற்கு திமுகவே காரணம் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குற்றம்சாட்டினார்.

சட்டப்பேரவையில் நேற்று நக ராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செய லாக்கத் துறை மானியக் கோரிக்கை கள் மீதான விவாதத்தை தொடங்கி வைத்து திமுக எம்எல்ஏ கு.பிச்சாண்டி பேசும்போது, உள் ளாட்சித் தேர்தல் தாமதம் ஆவது குறித்து குறிப்பிட்டார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறுக்கிட்டு பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் நடத்தி முடிக்க வேண் டும் என்பதற்காக பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த் தியும், 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் ஆதிதிரா விடர், பழங்குடியினர் மற்றும் பெண் களுக்கு இடஒதுக்கீடு செய்தும் இந்த அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆனால், உள்ளாட்சித் தேர் தலை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வார்டுகள் மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு காரணங்களைத் தெரிவித்து கடந்த ஆண்டு ஜூலையில் திமுக வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததுடன் உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு ஜூலை 12-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக் டோபர் 24-ம் தேதியுடன் முடிந்தது. அதற்கு முன்னதாக உள்ளாட் சித் தேர்தலை நடத்தி முடிக் கும் வகையில், அதற்கான அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆனால், தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என்ற ஒரேநோக்கில் திமுக மீண்டும் வழக்கு தொடர்ந் தது. இந்தமுறை, பழங்குடியின ருக்கு போதிய அளவில் இடஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது.

முந்தைய தேர்தல்களைக் காட் டிலும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பழங் குடியினருக்கு அதிக பதவியிடங் கள் ஒதுக்கீடு மற்றும் முதல்முறை யாக மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடம் (நீலகிரி மாவட்டம்) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற அரசு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், இதுதொடர்பான அரசாணையை உறுதி செய்தது. ஆனால், தேர்தல் அறிவிக்கை முறையாக வெளியிடப்படவில்லை எனக் கூறி அதை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உயர் நீதிமன்றத்தில் ஜூலை 14-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இவைதவிர உள் ளாட்சித் தேர்தல் தொடர்பான வேறு சில பொதுநல வழக்குகளும் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் தீர்ப்பு அடிப்படையிலேயே உள் ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

உள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், வார்டுகள் மறு வரையறை செய்யப்பட வேண்டும் என்பது போன்ற பல்வேறு காரணங்களைத் தெரிவித்து கடந்த ஆண்டு ஜூலையில் திமுக வழக்கு தொடர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x