Published : 20 Jan 2014 12:41 PM
Last Updated : 20 Jan 2014 12:41 PM

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு: பொதுப்பணித் துறை அறிவிப்பு

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பணித் துறை அறிவித்துள்ளது.

திருச்சி, தஞ்சை போன்ற டெல்டா மாவட்டங்களில் சாகுபடி முடிவடைந்து அறுவடை நடைபெற்று வருவதால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 52.59 அடியாக இருந்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 5000 கன அடியிலிருந்து 2000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x