Published : 20 Apr 2017 08:33 AM
Last Updated : 20 Apr 2017 08:33 AM

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வந்த இளநீர் வியாபாரி அடித்து கொலை: மைய உரிமையாளர் உட்பட 4 பேர் கைது

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வந்த இளநீர் வியாபாரியை அடித்து கொன்ற உரிமையாளர் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டனர்.

கே.கே.நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(36). இளநீர் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி புவனேஸ்வரி (32), இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சுப்பிரமணியை மவுலிவாக்கம், லில்லி தெருவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 14-ம் தேதி சேர்த்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணி கழிவறையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். மறுவாழ்வு மைய ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக புவனேஸ்வரி, போலீஸில் புகார் கொடுத்தார். மாங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போதை மறுவாழ்வு மைய உரிமையாளர் ரவி (45) டில்லிபாபு (34), மணிகண்டன்(23), சரண்(26) ஆகிய நான்கு பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது:

போதை மறுவாழ்வு மையத்தில் முறையான அனுமதியில்லாமலும், உரிய மருத்துவர்கள் இல்லாமலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு மேலும் பல குறைபாடுகள் இருந்துள்ளன. இதனை வெளியே சொல்லிவிடுவேன் என சிகிச்சைக்கு வந்த சுப்பிர மணி கூறியுள்ளார். இதனால் ஆத் திரம் அடைந்த மையத்தின் உரிமை யாளர் வீரையா(எ) ரவி(45), தனது டிரைவர் டில்லிபாபு(34), ஊழியர் மணிகண்டன்(23), மேலும் சிகிச்சை பெற வந்த பெங் களூருவை சேர்ந்த சரண்(26), ஆகி யோருடன் சேர்ந்து சுப்பிரமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி இறந்து போனார்.

இதனை மறைக்க கழிவறை யில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறி கீழ்ப்பாக்கம் அரசு மருத் துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரேதப் பரிசோதனை அறிக் கையில் சுப்பிரமணி உடல் முழுவ தும் பலத்த உள் காயங்கள் ஏற் பட்டுள்ளதாகவும், சிலர் பலமாக தாக்கியதால்தான் சுப்பிரமணி இறந்து போனதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து ரவி, டில்லிபாபு, மணிகண்டன், சரண் ஆகியோர் கைது செய்ய்யப்பட் டனர். மேலும் இந்த மையத்தில் சிகிச்சை பெற்றவர்கள் திருவேற் காட்டில் உள்ள வேறு மையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவ்வாறு போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x