Published : 17 Feb 2017 08:13 AM
Last Updated : 17 Feb 2017 08:13 AM

வெளிநாடுகளில் விரைவில் புதிய கிளைகள்: வாடிக்கையாளர் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை - ஜோய் ஆலுக்காஸ் பெருமிதம்

மிகச் சிறந்ததை வழங்க வேண்டும் என்ற எளிமையான நோக்கத்துடன் 30 ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட ஜோயாலுக்காஸ் தற் போது 14 நாடுகளில் 130 ஷோரூம்களுடன் வளர்ந்து நிற்கிறது. வாடிக்கையாளர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று அதன் நிர்வாக இயக்குநர் ஜோய் ஆலுக்காஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஐக்கிய அரபு அமீரகத்தில் 1987-ல் தொடங்கப்பட்ட ஜோயா லுக்காஸ் தற்போது ஜுவல்லரி, மணி எக்ஸ்சேஞ், ஃபேஷன் & டெக்ஸ்டைல்ஸ், சொகுசு விமான சேவை, வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனது தடத்தை பதித்துள்ளது.

சவுதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஒரு கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட தலைசிறந்த பிராண்டாக வளர்ந்துள்ளது.

ஜோயாலுக்காஸ் பல்வேறு சாதனைகளையும், விருதுகளை யும் வென்றுள்ளது. ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற முதல் ஜுவல் லரி ரீடெய்ல் நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சூப்பர் பிராண்ட் தகுதி, உலகின் மிகப் பெரிய ஜுவல்லரி ஷோரூம் என்ற லிம்கா அங்கீகாரம் போன்ற சாதனைகளை செய்துள்ளது.

இவை அனைத்தும் வாடிக்கை யாளர்களின் ஒத்துழைப்பு இல்லா மல் சாத்தியமில்லை. 30 ஆண்டு களாக ஆதரவு வழங்கிவரும் வாடிக்கையாளர்களுக்கு அன்பை யும், நன்றியையும் உரித்தாக்கு கிறோம்.

கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் 2017-ம் ஆண்டில் ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x